Colombo

BIG Fish Market Peliyagoda | பேலியகொடையில் அமைந்துள்ள இலங்கையின் மிகப் பெரிய மீன் சந்தை

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இங்கு மீன்கள் சிறிய கூலர் வாகனங்களில் வந்து குவிகின்றன. திருகோணமலை, யாழ்ப்பாணம், மாத்தறை, அம்பாந்தோட்டை புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு போன்ற பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு மீன்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.

இலங்கை ஒரு தீவாக விளங்குகின்றமையால் அதனைச் சுற்றி அமைந்துள்ள பெரும் சமுத்திரம் ஆகிய இந்து சமுத்திரத்தின் எந்த ஒரு கடலோர மாவட்டங்களிலும் கடல் உணவை எளிதாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. மீன் வளத்திற்கு குறைவில்லாத எங்கள் இலங்கை நாட்டில் பாரை, சுறா, கொடுவால்,சூரன், ஒட்டி, ஓரா, விளை, திரளி ,சூடை,முரல், சீலா போன்ற எண்ணற்ற மீன்களும் கணவாய், நண்டு,இறால், கூந்தல் கணவாய் போன்ற வேறுபல கடல் உணவுகளையும் நாம் இங்கு மற்றைய மீன் சந்தை களைவிட அரைவாசி விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மீன் சந்தை இப்பகுதியை சூழ அதனை வெட்டி செல்வதற்கான கடைகளையும் நீங்கள் காணலாம். அவையாவும் உட்புறமும் வெளிப்புறமும் மிகவும் சுத்தமாக காணப்படுவது இங்கு இருக்கும் ஓர் அரிய செயலாகும்.

இலங்கையில் காணப்படும் மீன் சந்தைகளில் மிகவும் முக்கியமானதும், மிகப் பெரியதும் பேலியகொடையில் அமைந்த மீன் சந்தைப் பகுதியாகும். இச் சந்தை ஆனது காலை 1 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்து காணப்படுகின்றது. போயா தினங்கள் தவிர எல்லா நாட்களிலும் இங்கு மீன் வாங்கக் கூடியதாக இருக்கும்.

இங்கே மீன்களை விற்பனை செய்வோர் ஒரு சீருடையை அணிந்து ஒழுங்கு முறையில் இருப்பதை நீங்கள் காணலாம். இம் மீன் சந்தை கட்டட தொகுதியானது 2020 கொரனாக் காலப்பகுதியில் மூடப்பட்ட போதும் பின்பு இந்து சமுத்திரப் பரப்புகளில் கப்பல்கள் தீப்பற்றி இரசாயன கழிவுகள் அகற்றப்பட்ட நிலையிலும் மீண்டும் புதுப்பொலிவுடன் அன்று போல் என்றும் காணப்படுவதை நீங்கள் காணக்கூடியதாக இருக்கும். கொழும்பில் உள்ள ஏனைய மீன் சந்தைகளுக்கு இங்கிருந்து கூலர் வாகனங்கள் மூலம் மீன்கள் வியாபாரிகளால் ஏற்றிச் செல்லப்படுகின்றன.

கொழும்பின் எப்பகுதியில் வசிப்பவர்களும் பேலியகொடை சந்தைப் பகுதிக்கு மீன்களை வாங்கிச் செல்ல வருவது என்பது பல வகை மீன்களை ஒரே இடத்தில் கண்டு பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு சிறந்த முறையாகும்.

கொழும்பின் புறநகர் பகுதிகளில் காணப்பட்ட மீன் சந்தை மெனிங் சந்தை என்பன பேலியகொடை க்கு மாற்றப்பட்டு மிகுந்த வசதியுடன் நடைபெற்று வருவது அனைவருக்கும் வியப்பிற்குரிய ஒரு சிறந்த விடயமமே ஆகும்