Colombo

Diyasaru Park – தியசுரு பூங்கா

தியசர பூங்காவினுள் பெரிய வாகனத் தரிப்பிடம் ஒன்றுள்ளது.அதனைக் கடந்து ticket counter காணப்படும்.உள்நாட்டினருக்கு ரூபாய் 100 அறவிடப்படுகின்றது. அதனப் பெற்றுக்கொண்டு உல் நுழைந்தவுடன் கம்பி வேலியாலான பகுதியைக் கடந்து செல்லலாம். தொடர்ந்து butterfly garden ஐ காணலாம். திருமண நிகழ்வு shooting எடுக்கக் கூடிய வகையில் திறந்த மண்டபமாகவும் அமைந்துள்ளது. தொடர்ச்சியாகச் செல்லும் தாமரைக்குளங்கள் அழகிற்கு அழகூட்டுகின்றன.அவற்றின் மீது தமது உணவை தேடுவதற்காக திரியும் பறவைகளும் சொல்லிலடங்கா.அத்துடன் ஏராளமான மீன் வகைகளும் வசிக்கின்றன.அவற்றுள் நீலவர்ண கோழிகள் விசேடமானவை.

இங்குள்ள தாவரங்களின் தாவரவியவியற் பெயர் விலங்குகளின் விலங்கியல் பெயர் என்பன பெயர் பலகையில் குறிக்கப் பட்டுள்ளன.எனவே இவ் தாழ் நாட்டு ஈரவலயக் காடு மாணவர்களிற்கு சிறந்த கற்றல் சூழலை வழங்குகின்றது.நகரமயமாக்கல் காணப்படுகின்ற போதும் அதன் தாக்கத்திற்கு உட்படாமல் இன்றும் பேணப் படுகின்றது.வௌவ்வால்கள் தங்கும் வகையில் அமைக்கப் பட்ட bat house உம் இருக்கின்றது. முள்ளம் பன்றி,குரங்கு, மரநாய், fishing cat,கீரி,எலி போன்ற முலையூட்டிகள் வாழ்கின்றன. அவை தவிர ஏராளமான நகருயிர்கள் [பாம்புகள், பல்லி,கபரக்கொய்யா] போன்றவையும் விஷத் தவளையான பச்சைத் தவளையையும் காணலாம். இலங்கையில் மீன் பிடிப் பூனை இனம் ஆய்விற்குட்படுத்தப் பட்டுள்ளது.

படக்குச் சவாரி ஒன்றையும் வாவிகளினூடு மேற்கொள்ளலாம்.அழகான மரப் பாலத்திலேறி நடந்து செல்லுதல் மனதை நெகிழ்வாக்கும் செயலாகும்.உரமான bird watching tower ஒன்றுள்ளது.அதன் வேறு வேறு தளங்களில் நின்று 360 பாகையையும் காணக்கூடியதாக இருக்கும்.இதன் மூலம் அங்கு வாழும் பறவைகளை எளிதாக காணலாம்.மாலை வேலைகளிலும் காலை வேலைகளிலும் சென்று bird watching photo graphers படம் எடுக்கக்கூடியதாகவும் குடும்பமாக சென்று கழிக்க இனிய பொழுது போக்கு இடமும் ஆகும்.