Jaffna

Greater Flamingo (பெரும் பூநாரை) Bird in Sri Lanka

இது மிகவும் அழகான ஓர் நாரை வகையைச் சார்ந்த பறவையாகும். இவை உயிரியல் பாகுபாட்டின் படி

திணை/Kingdom – விலங்கு/Animalia
தொகுதி/Phylum – முதுகுநாணி/Chordata
வகுப்பு/Class – பறவை/Aves
வரிசை/Order – Phoenicopteriformes
குடும்பம்/Family – Phoenicopteridae
பேரினம்/Genus – பூநாரை/Phoenicopterus
இனம்/Species – P. roseus

இது உலகின் பல பாகங்களிலும் பரம்பி வாழ்கின்றது. பூநாரைகள் அகலமான வளைந்த அலகையும் நீண்ட முடியற்ற சிவந்த கால்களையும் கொண்ட, நீண்ட வளைந்த கழுத்தையும் வாத்துகள் போன்ற விரலிடைசவ்வுள்ள பாதத்தையும் உடையவை. இவற்றின் இறக்கை செந்நிறம் கலந்த வெள்ளையுடன் ஓரங்களில் சருகை வைத்தது போல கருமை நிறத்தையும் உடையவை. ஏறத்தாழ நிற்கும் போது 1 1/2 மீட்டர் உயரமானவை. இவை அதிக உப்புத் தன்மையான கடனீரேரிகள், கண்டல் சாகியங்கள் ஆகியவற்றில் வாழ்வதுடன் அங்கு வாழும் மிதவை உயிரிகள் சிறிய மீனினங்கள் புழுபூச்சிகள் ஆகியவற்றை அலகால் வடித்து உண்கின்றன.

இப் பூநாரை வகைகளில் இரு இனங்கள் பழைய உலகத்திற்கு உரியன. அவையாவன பெரும் பூநாரை மற்றயது தடும்பநாரை
1.பெரும் பூநாரைகள் ஆபிரிக்க பகுதிகள், தெற்கு ஐரோப்பா, தெற்கு, தென்மேற்க்கு ஆசியப் பகுதிகளில் காணப்படுகின்றது.
2.தடும்பநாரை -இது ஆபிரிக்கா மட்டுமின்றி இந்தியாவில் அதிக அளவில் காணப்படுகின்றது.

புதிய இனத்திற்குரிய இனங்களாக சிலிப் பூநாரை, ஆண்டியப்பூநாரை, சாமோசின்பூநாரை, அமெரிக்க பூநாரை, ஆகியவற்றை குறிப்பிடலாம்.
1.சிலிப் பூநாரை-தென்னமெரிக்கா பகுதிகளிலும்
2.சாமோசின்பூநாரை-பெரு, சிலி, பொலிவியா, ஆஜெந்தீனாவின் உயர்ந்த மலைப்பகுதிகள் போன்றவற்றிலும்
3.ஆண்டியப்பூநாரை-பெரு, சிலி, பொலிவியா, ஆஜெந்தீனா பகுதிகளில் காணப்படுகின்றது .
4.அமெரிக்க பூநாரை-இது கரீபியன் தீவுகள், மெக்ஸிகோ, வெனிசுலா கலாபக்கசு தீவுகள் ஆகியவற்றில் காணப்படுகின்றன

இப் பெரும் பூநாரை இனங்கள் இலங்கை நாட்டில் காணக்கூடிய இடங்களாக வடக்கில் காரைநகர், சுண்டிக்குளம், மன்னார், வேலணை, நாகர்கோவில், சரசாலை, வல்லைவெளி போன்ற இடங்ளிலும் தெற்கில் புத்தள சரணாலயம் பகுதிகளிலும் காணப்படுகின்றது. இருப்பினும் இதன் வருகை தெற்கில் குறைவடைந்து வடக்கில் மிகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.

இவற்றில் நாங்கள் நேரில் சென்று பார்வையிட்ட ஓர் இடமாக சரசாலையின் கண்டற் சாகிய தொகுதி உள்ளது.இங்கு 2000-4000 வரையான பெரும் பூநாரைகளை ஜூன், ஜூலை மாதங்களில் அவதானிக்கக்கூ டியதாக இருக்கும். இது ஓர் கண்கொள்ளாக்காட்சியாகும். இதே காலப்பகுதியில் வல்லை வெளியில் நீர் தேங்கி நிற்கின்ற வீதியின் இரு மருங்கிலுமுள்ள வெ ட்டையான பகுதிகளில் இவ் அழகிய பெரும் பூநாரைகளைக் காணலாம். இது நீங்கள் யாழ்ப்பாணத்தில் சென்று காணக்கூடிய இலகுவான இரு இடங்களாகும். புகைப்படக்கலைஞர்கள் மற்றும் பறவை அவதானிப்புகளில் அதிக நாட்டம் கொண்டவர்கள் ஏனைய தனியொருவற்குகூட மனதை புத்துணர்வு ஊடடக்கூடிய ரம்மியம் நிறைந்த இடங்களாகும்.

எனினும் இவற்றை சிறுவர்களுடன் சென்று பார்த்தால் அவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் பறவைகளை எழுந்தோட செய்து விடும் எனவே பொருத்தமான ஆடைகளை அணிந்து மிக மெதுவாக முன்னேறும் பட்ச்சத்தில் நேர்த்தியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுக்கக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒவ்வொருவரும் இவ் அரிய காட்சிகளை பார்க்க தவறாதீர்கள்.